மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்.. திரையுலகில் பெரும் அதிர்ச்சி!"
தென் மாவட்டத்தின் ஒரு மூலையிலிருந்து, கண்களில் கனவுகளோடும், நெஞ்சில் தீராத தாகத்தோடும் சென்னைக்கு ரயில் ஏறியவர் அவர். சினிமாதான் வாழ்க்கை, லட்சியம். ஆனால், வண்ணமயமான இந்த உலகம் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அவமானங்கள், நிராகரிப்புகள், பசி, பட்டினி என அத்தனையையும் சந்தித்தார். விடாமுயற்சியின் விளைவாக, வியர்வையையும் கண்ணீரையும் மூலதனமாக்கி, தனது முதல் படத்தை இயக்கினார்.
அடுத்தடுத்து சில வெற்றிப்படங்கள். இனி அவரை அசைக்க முடியாது எனப் பெயரெடுத்தார். பணம், புகழ், அந்தஸ்து என அனைத்தும் அவர் காலடியில் குவிந்தன. ஆனால், சினிமா உலகம் ஒரு விசித்திரமான சர்ப்பம்; ஏணியில் ஏற்றிய வேகத்தில், கழுத்தைப் பிடித்துத் தள்ளவும் தயங்காது. தொடர் தோல்விகள் அவரை மீண்டும் வறுமையின் படுகுழிக்குள் தள்ளியது. சேர்த்த செல்வம் கரைந்தது, சுற்றி இருந்த கூட்டம் கலைந்தது. குடும்பம் மீண்டும் ஒருவேளை சோற்றுக்கே அல்லாடும் நிலைக்கு வந்தது.
மகன்களின் எழுச்சியும், தந்தையின் பொறாமையும்!
தன்னால் முடியாததை, தன் வாரிசுகளாவது சாதிக்கட்டும் என தனது இரண்டு மகன்களையும் சினிமாவுக்குள் கைப்பிடித்து அழைத்து வந்தார். தந்தையின் வழியில், ஆரம்பத்தில் அவர்களுக்கும் பாதை கரடுமுரடாகவே இருந்தது. கேலிகள், கிண்டல்கள், அவமானங்கள்... அனைத்தையும் தாங்கிக்கொண்டு, "எப்படியாவது ஜெயிக்க வேண்டும், இந்த குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டும்" என்ற வெறியோடு உழைத்தார்கள். அவர்களின் உழைப்பு வீண்போகவில்லை. தந்தையால் எட்ட முடியாத உயரத்தைத் தொட்டார்கள். கோலிவுட்டின் தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்தனர். வறுமையில் வாடிய குடும்பம், மீண்டும் உச்சத்திற்கு சென்றது.
மகன்களுக்குத் திருமணமாகி, குடும்ப வாழ்க்கை இனிதே போய்க்கொண்டிருந்தது. மூத்தவர், பிரபலமான ஒரு பெண்ணை மணந்தார். இளையவருக்கும் அதேபோல சிறப்பான ஒரு வாழ்க்கை அமைந்தது. மகன்களின் வளர்ச்சியையும், அவர்களின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் கண்டு பெருமைப்பட வேண்டிய தந்தைக்கோ, உள்ளுக்குள் ஒரு வினோதமான பொறாமைத் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. தான் இழந்த புகழையும், இளமையையும் தன் மருமகளின் அழகில் கண்டாரோ என்னவோ!
போதையில் நடந்த பாவம்... குடும்பத்தில் பாய்ந்த விஷம்!
காலம் செல்லச் செல்ல, மூத்த மருமகள் மீது மாமனாருக்கு ஒரு வக்கிரப் பார்வை விழுந்தது. "இது தப்பு, உறவுகள் பழிக்கும், சமூகம் காரி உமிழும்" என உள்மனம் எச்சரித்தாலும், ஆசை எனும் மிருகம் அறிவை வென்றது. ஒரு நட்சத்திர பார்ட்டியில், மது தலைக்கேறிய நிலையில், தள்ளாடும் நாவோடு தன் ஆசையை மருமகளிடம் உளறினார். அந்தப் பெண்ணும் உச்சக்கட்ட போதையில் இருந்ததால், எது சரி, எது தவறு எனப் பகுத்தறியும் நிலையில் இல்லை. அந்த இரவின் இருள், அவர்களுடைய உறவின் புனிதத்தையும் சேர்த்தே விழுங்கியது.
அந்த ஒருநாள் தவறு, தொடர்கதையானது. மாமனாரின் மிரட்டலுக்கோ, மயக்கும் வார்த்தைகளுக்கோ அந்தப் பெண் அடிபணிந்தாரா அல்லது அவரும் அதை விரும்பினாரா என்பது மர்மம். ஆனால், திகட்டத் திகட்ட அந்த உறவை அனுபவித்திருக்கிறார் அந்த சீனியர் பிரபலம். இதன் விளைவாக, மருமகள் கர்ப்பமானார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என்னவாகும் என்ற பயத்தில் இருவரும் தவித்திருக்கின்றனர்.
கையும் களவுமாக சிக்கிய கள்ள உறவு! வெளுத்து வாங்கிய மகன்!
மனைவியின் நடவடிக்கைகளிலும், தந்தையின் பார்வைகளிலும் சந்தேகத்தின் நிழலைக் கண்டார் மூத்த மகன். மனம் ஏற்க மறுத்தாலும், உண்மையை அறிய இருவரையும் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். அப்போதுதான், தன் முதுகில் குத்தப்பட்ட துரோகத்தின் ஆழம் அவருக்குப் புரிந்தது. தந்தையும், தன் உயிரென நேசித்த மனைவியும் தனக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தார்.
ஒருநாள், அவர்களை கையும் களவுமாகப் பிடித்தபோது, அவர் அடைந்த கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் அளவே இல்லை. தந்தையை ஒரு தனி அறைக்கு இழுத்துச்சென்று, "என்னை உருவாக்கியவர் நீங்கள்தானே? என் தலையில் இப்படி ஒரு இடியை இறக்கிவிட்டீர்களே!" எனக் கதறி, அடித்து வெளுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மனைவிக்கும், "இதுதான் உனக்குக் கடைசி எச்சரிக்கை" எனக் கூறி, அந்த நொடியே வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் சென்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் தீயாகப் பரவி வருகின்றன.

Post a Comment